முகப்பு
இந்தியா

காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்!

காங்கிரஸ் அலுவலகத்தில் குழாய்களைத் திருடிவிட்டு, ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன் பற்றி..

காங்கிரஸ் கொடியுடன் தொண்டர்கள் - கோப்புப் படம்
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்குள் புகுந்த திருடன் அங்கிருந்து தண்ணீர் குழாய்களைத் திருடிக்கொண்டு, ஐ லவ் யூ அம்பிகாபூர் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் அலுவலகத்தில் உறுப்பினர்கள் அறை, கழிப்பறைகளில் இருந்து இரும்புக் குழாய்கள், மற்றும் சில பொருள்களைத் திருடிச் சென்ற திருடன், காவல்துறையினருக்கு சவால் விடுக்கும் வகையில் கைப்பட ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அம்பிகாபூரில் அமைந்துள்ள ராஜீவ் பவன் காங்கிரஸ் அலுவலகத்தில் இது மூன்றாவது திருட்டு சம்பவம் என்றும், இதற்கு முன்பு சிறு சிறு திருட்டுகள் நடந்திருப்பதாகவும், தற்போது திருடர்கள் கடிதம் எழுதிவிட்டுச் சென்றதால் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

summary

The thief had written "I love you" in the Congress office!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.