செய்யறிவின் துணையோடு துல்லியமாக இயங்கும் ஜிபிஎஸ் கண்டுபிடிப்பு!
செய்யறிவின் துணையோடு துல்லியமாக இயங்கும் ஜிபிஎஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, சாலைகளில் வழிசொல்லும் செயலிகளைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக செய்யறிவுடன் இயங்கும் துல்லியமான ஜிபிஎஸ் வழிசொல்லும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஐஐடி சென்னை மற்றும் விஐடி வேலூர் என இரண்டு கல்வி நிறுவனங்களும் இணைந்து, புதிய செய்யறிவுடன் இணைந்து இயங்கும் வழிசொல்லும் ஜிபிஎஸ் அமைப்பை உருவாக்கி சாரதனை படைத்துள்ளன.
ஒரு சாலையில் இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றும், அந்த சாலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றும் இதுவரை ஜிபிஎஸ் மூலம் அறிந்துவந்தோம். ஆனால், திரும்ப வேண்டிய சாலைக்கு மிக அருகில் இருக்கிறோமா? நமது வாகனம் சாலைக்கு நடுவில் இருக்கிறதா? எங்கே இருக்கிறது என்பதையும் இனி துல்லியமாக அறிய முடியும் என்கின்றன தகவல்கள்.
Advertisement
Advertisement
இதனால், தவறான சாலையில் திரும்பாமல் இருக்கவும், திரும்ப வேண்டிய சாலையில் சரியாக திரும்பவும், தவறான பாதையில் திரும்புவதற்கு முன்பே அறிந்துகொள்ளவும் முடியும்.
தற்போதுவரை சாலையின் இடதுபக்கத்தில் அல்லது வலதுபக்கத்தில் வாகனம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது. இனி, சாலையில் எந்தப் பக்கத்தில் வாகனம் இருக்கிறது என்பதைகூட துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
A GPS that works accurately with the help of Seyarivi has been invented.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.