மகாராஷ்டிரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலி!
கள்ளச்சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வட் மற்றும் புணே சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் வாங்கி குடித்துள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலானோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Advertisement
Advertisement
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் யோகேஷ் வான்கடே கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.