முகப்பு
இந்தியா

புலி தாக்கியதில் 4 பெண்கள் பலி!

புலி தாக்கியதில் நான்கு பெண்கள் பலியானது குறித்து...

புலி தாக்கியதில் 4 பெண்கள் பலி - கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம், சந்திரபூரில் பீடி இலை என்று அழைக்கப்படும் தெண்டு இலைகளைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, புலி தாக்கியதில் நான்கு பெண்கள் பலியாகியதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிந்தேவாஹி தாலுக்காவில் உள்ள குஞ்சேவாஹி கிராமத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பீடி, சிகரெட் போன்றவற்றிற்கு இயற்கையான உறையாகப் பயன்படுத்தப்படும் தெண்டு இலைகளைச் சேகரிப்பதற்காக, பெண்கள் குழு ஒன்று வனப்பகுதிக்குச் சென்றிருந்தது. அவர்கள் இலைகளைச் சேகரிப்பதில் மும்முரமாக இருந்தபோது, ​​அவர்களில் நான்கு பேரை ஒரு புலி கொன்றது.

Advertisement

Advertisement

பலியான பெண்கள் குஞ்சேவாஹியைச் சேர்ந்த கவாடாபாய் மொஹர்லே (45), அனிதாபாய் மொஹர்லே (40), சுனிதா மொஹர்லே (38) மற்றும் சங்கீதா சௌதரி (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புலி, நான்கு பெண்களையும் ஒரே இடத்தில் வைத்துக் கொன்றதா? அல்லது வெவ்வேறு இடங்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததா? என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை அலுவலர்கள், நேரில் பார்த்தவர்களின் முன்னிலையில் தயாரிக்கப்படும் அறிக்கை (பஞ்சநாமா) வெளிவந்த பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும் எனக் கூறினர்.

summary

A Forest Department official stated that four women were killed in a tiger attack while plucking Tendu leaves also known as "Beedi leaves" in Chandrapur, Maharashtra.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.