முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: புலி தாக்கியதில் 4 பெண்கள் பலி!

மகாராஷ்டிரத்தில் புலி தாக்கியதில் நான்கு பெண்கள் பலியானது குறித்து...

புலி தாக்கியதில் 4 பெண்கள் பலி - கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம், சந்திரபூரில் பீடி இலை என்று அழைக்கப்படும் தெண்டு இலைகளைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, புலி தாக்கியதில் நான்கு பெண்கள் பலியானதாக வனத்துறை அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை (மே 22) காலை தெரிவித்தார்.

சிந்தேவாஹி தாலுகாவில் உள்ள குஞ்சேவாஹி கிராமத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப்பொருள்களைச் சுற்றப் பயன்படுத்தப்படும் தெண்டு இலைகளைச் சேகரிப்பதற்காக, பெண்கள் குழு ஒன்று வனப்பகுதிக்குச் சென்றிருந்தது. அவர்கள் இலைகளைச் சேகரிப்பதில் மும்முரமாக இருந்தபோது, ​​அவர்களில் நான்கு பேரை ஒரு புலி தாக்கியது.

Advertisement

Advertisement

பலியான பெண்கள் குஞ்சேவாஹியைச் சேர்ந்த கவாடாபாய் மொஹர்லே (45), அனிதாபாய் மொஹர்லே (40), சுனிதா மொஹர்லே (38) மற்றும் சங்கீதா சௌதரி (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஒரே இடத்தில் நிகழ்ந்ததா? அல்லது வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்ததா? என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

முதல் தகவல் அறிக்கை வெளிவந்த பிறகே, கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

summary

A Forest Department official stated that four women were killed in a tiger attack while plucking Tendu leaves also known as "Beedi leaves" in Chandrapur, Maharashtra.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments