ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!
ஐபிஎல் இறுதிப் போட்டியையொட்டி சிறப்பு பூஜை செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் குறித்து...
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் இன்று (மே 31) யாக சாலை பூஜை நடத்தினர். மேலும், கோயில்களில் சிறப்பு பூஜைகளிலும் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி இன்று (மே 31) நடைபெறவுள்ளது. இதில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன.
நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. போராடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி, சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் நோக்கத்தில் உள்ளது. இதனால், இறுதிப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்காக அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகத்தில் யாக சாலை பூஜை நடத்தினர். இதில் பெங்களூரு வெற்றிக்காக சிறப்பு மந்திரங்கள் கூறப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜையும் நடத்தினர்.
கடந்த ஆண்டும் பெங்களூரு அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் இதேபோன்று யாகசாலை பூஜை நடத்தியது குறிப்பிடத்தக்கது.