அம்மா கண்களில் துளிர்த்த கண்ணீர்!
இந்தப் படத்தை நான்தான் எடுத்தேன். அன்று எனக்கு சரியான தலைவலி. சிறு வயதிலிருந்து எனக்குத் தலைவலி வந்ததே இல்லை. வீட்டில் உள்ளவர்கள் டாக்டரை அழைத்தார்கள்.
இந்தப் படத்தை நான்தான் எடுத்தேன். அன்று எனக்கு சரியான தலைவலி. சிறு வயதிலிருந்து எனக்குத் தலைவலி வந்ததே இல்லை. வீட்டில் உள்ளவர்கள் டாக்டரை அழைத்தார்கள்.
டாக்டர் வந்ததும், அம்மா அதைப் பார்த்து 'என்னப்பா டாக்டர் எல்லாம் வராங்கன்னு என்னிடம் கேட்டார்கள்.' 'இல்லையம்மா இது சாதாரண தலைவலிதான். வேற ஒண்ணுமில்லை' என்றேன்.
'நான் உயிரோடு இருக்கறப்ப டாக்டர் எல்லாம் வந்து உன்னைப் பார்க்கணுமா?' என்று கூறிய அம்மாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள். இந்தப் படத்தைப் பார்த்தால் அது தெரியும்.. அப்படியே அம்மாவை உட்கார வைத்து இந்த ஃபோட்டாவை எடுத்தேன்!
-இளையராஜா
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.