கல்லூரி பட்டமளிப்பு விழா
உத்தரமேரூர் அருகே உள்ள ஏ.சி.டி. பொறியியல் கல்லூரியில் 2008-2012-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு முதல்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM
உத்தரமேரூர் அருகே உள்ள ஏ.சி.டி. பொறியியல் கல்லூரியில் 2008-2012-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்தது.
கல்லூரித் தலைவர் டி.குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டி.துரைசாமி வரவேற்றார்.
இந்துஸ்தான் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கே.சாருகேசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டமளித்து பாராட்டினார்.
Advertisement
இவ்விழாவில் எலக்ட்ரிக்கல் பிரிவு தலைவி எம்.ஹேமலதா, எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் டி.லோகாபிராமன், கணினித் துறை தலைவர் இ.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.