ரூ. 90 லட்சம் நிலம் அபகரிப்பு: 4 பேர் கைது
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேரை காஞ்சிபுரம் மாவட்ட
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேரை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுஜதா ஹரநாத், ரத்தினமாலா. இவர்கள் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் 27 சென்ட் காலிமனையை துரைபாபுவிடம் இருந்து வாங்கினர்.
இந்நிலையில் இந்த காலிமனை மீது வில்லங்கம் போட்டுப் பார்த்தனர். அப்போது கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சந்தானம் (49), சென்னை அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த மோகன்குமார் (38), கானாத்தூர் துரைராஜ் (38), பனையூர் சாதீக் பாட்சா (39) ஆகியோர் சேர்ந்து நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.
Advertisement
அதன் இன்றைய மதிப்பு ரூ. 90 லட்சம். இது குறித்து சுஜதா ஹரநாத், ரத்தினமாலா ஆகியோர் காஞ்சிபுரம் எஸ்.பி. விஜயகுமாரிடம் புகார் செய்தார்.
புகாரின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு 4 பேரையும் கைது
செய்தனர்.