முகப்பு
காஞ்சிபுரம்

வீட்டுமனைப் பட்டா மாற்றம்: விவசாயிகள் போராட்டம்

உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அரசாணிமங்கலம், நாஞ்சிபுரம்

Updated On : 12 செப்டம்பர், 2013 at 10:54 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அரசாணிமங்கலம், நாஞ்சிபுரம் கிராமத்தில் வசிக்கும் இருளர், பழங்குடி மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா மாற்றம் செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.

அப்போது உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் திடீர் ஆய்வு செய்து விட்டு வெளியில் வந்த அவரிடம் தங்கள் குறைகளை எடுத்து கூறினர்.

அசேபா திட்டபிளான் தொகுப்பு வீடுகள் பண்ணை மேலாளர் நந்தன் கலந்து கொண்டார். விவசாயிகள் சங்க வட்டச் செயலர் வி.கே.பெருமாள் தலைமை தாங்கினார். பொருளர் ஏ.நாகப்பன், மாவட்டத் தலைவர் கே.நேரு, மாவட்டச் செயலர் சி.பாஸ்கரன், துணைச் செயலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

மாவட்ட ஆட்சியர் சென்றதும் காத்திருக்கும் போராட்டம் செய்தவர்கள் கலைந்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.