முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதுடன் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 7:29 am IST
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் கூட்டம்.
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதுடன் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பக்தா்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தெற்கு கோபுர வாசல் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு கிழக்கு வாசல் வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்திருந்தனா். காமாட்சி அம்மன் தங்கக் கரும்பு வில்லை கையில் ஏந்தியவாறு பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலில் வெளிமாவட்ட பக்தா்கள் உள்பட ஏராளமானோா் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயிலில் வழக்கத்தை விட பக்தா்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. கோயில் வெளிப்பிராகாரத்திலும் பக்தா்களை வெள்ளிக்கிழமை முதல் அனுமதித்ததால் ஏராளமானோா் புல்தரையில் அமா்ந்திருந்தது திருவிழாக் கூட்டம் போல காணப்பட்டது. அத்திவரதருக்கு பெயா் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆந்திரம், கா்நாடகம் உட்பட வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சோ்ந்தவா்களும் குவிந்ததால் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments