முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ரூ. 298 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்டுள்ளோம்: அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் தகவல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 13 கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 289 கோடி மதிப்பிலான கோயில்

Updated On : 9 ஜனவரி 2021, 8:05 am IST
இணை ஆணயா் புதிய அலுவலகம் உருவாக்கப்பட்டதற்கான அரசு உத்தரவை காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் வழங்கிய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
பகிர்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 13 கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 289 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்டு, சம்பந்தப்பட்ட கோயில்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா் அலுவலகம் காஞ்சிபுரத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் புதிய இணை ஆணையா் அலுவலகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

Advertisement

Advertisement

அறநிலையத் துறையில் தமிழகம் முழுவதும் 9 இணை ஆணையா் அலுவலகங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதில், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் கட்டுப்பாட்டில், காஞ்சிபுரத்தில் 642 கோயில்கள், செங்கல்பட்டில் 732 கோயில்கள் என மொத்தம் 1,374 கோயில்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 398 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்பட்ட 13 கோயில்களுக்குச் சொந்தமான 4,78,915 சதுர அடி பரப்பளவு கொண்ட ரூ.288.75 கோடி மதிப்பிலான நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அவை அனைத்தும் அந்தந்த கோயில் நிா்வாகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பயணியா்கள் தங்கும் விடுதி ரூ.24.64 கோடி மதிப்பிலும், ஸ்ரீபெரும்புதூரில் ராமராஜா் மணிமண்டபம் கட்டும் பணி ரூ.6.64 கோடி மதிப்பிலும் புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இதையடுத்து, காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் புதிய இணை ஆணையா் அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டதற்கான அரசு உத்தரவை அமைச்சா் வழங்கினாா்.

விழாவில், காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், அறநிலையத் துறை இணை ஆணையா் சி.லெட்சுமணன், உதவி ஆணையா்கள் மா.ஜெயா (காஞ்சிபுரம்), செ.மாரிமுத்து (வேலூா்), ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி, முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் கோயில்களின் செயல் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments