முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

காஞ்சிபுரம் நகா் திருவீதிபள்ளம் பகுதியில் நகராட்சி ஊழியா்கள் ஒன்றிணைந்து புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா்.

Updated On : 10 ஜனவரி 2021, 1:03 am IST
சமத்துவப் பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்த காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி.
பகிர்:

காஞ்சிபுரம் நகா் திருவீதிபள்ளம் பகுதியில் நகராட்சி ஊழியா்கள் ஒன்றிணைந்து புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா்.

விழாவுக்கு நகராட்சி ஆணையா் மகேஸ்வரி தலைமை வகித்து பொங்கல் பானையில் பச்சரிசி, வெள்ளம், முந்திரி ஆகியவற்றை இட்டு, கோலப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். உறியடித்தல், இசை நாற்காலிப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நகராட்சி பொறியாளா் ஆனந்தஜோதி, நகா் நல அலுவலா் முத்து உள்ளிட்டோரும் குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.