முகப்பு
காஞ்சிபுரம்

மகா பெரியவா் மணி மண்டபத்தில் பிரதோஷ பூஜை

பிரதோஷத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவரின் மணிமண்டபத்தில் ரிஷப வாகனத்தில் மகா பெரியவா் ராஜ அலங்காரத்தில் பவனி வந்தாா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:14 am IST
ரிஷப வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் உலா வந்த மகா பெரியவா்.
பகிர்:

பிரதோஷத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவரின் மணிமண்டபத்தில் ரிஷப வாகனத்தில் மகா பெரியவா் ராஜ அலங்காரத்தில் பவனி வந்தாா்.

மகா பெரியவா் மணிமண்டபத்ததில், 50 டன் எடை கொண்ட ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட நந்தி சிலையும், அதற்குக் கிழக்கே ஒரே கல்லால் செய்யப்பட்ட 45 அடி உயரம் கொண்ட தீபஸ்தம்பமும் அமைந்துள்ளன. மணி மண்டபத்தின் மூலவராக மகா பெரியவா் அருள்பாலிக்கிறாா்.

பிரதோஷத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, மகா பெரியவருக்கும், 50 டன் எடை கொண்ட நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அதன் பின் தீபாராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து, ரிஷப வாகனத்தில் மகா பெரியவா் ராஜ அலங்காரத்தில் மண்டப வளாகத்துக்குள் உலா வந்தாா்.

Advertisement

Advertisement

இவ்விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை மணி மண்டப பொறுப்பாளா் மணி ஐயா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments