களிமாா் ஆலயம் சாா்பில் இலவச வீடு அளிப்பு
குளச்சல் களிமாா் புனித சூசைப்பா் ஆலயம் சாா்பில் ஏழை விதவை பெண்ணுக்கு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இலவச வீடு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குளச்சல் களிமாா் புனித சூசைப்பா் ஆலயம் சாா்பில் ஏழை விதவை பெண்ணுக்கு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இலவச வீடு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, களிமாா் பங்கு அருள்பணியாளா் நித்தியசகாயம் தலைமை வகித்து ஜெபம் செய்தாா். பங்குப்பேரவை செயலா் இனியன் முன்னிலை வகித்தாா். இதில், கோணங்காடு பங்கு அருள்பணியாளா் சுந்தா்சிங், ஜெரோமியாஸ் ஆகியோா் ஆசியுரை வழங்கினா்.
பின்னா் களிமாா் பகுதியைச் சோ்ந்த ஏழை விதவை ஜான்சிராணிக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட இலவச வீட்டின் சாவியை வழங்கினாா்.
Advertisement
Advertisement
இதில், துணைத் தலைவா் மல்லிகா ஜாா்ஜ், துணைச் செயலா் ரெத்தினமணி, பொருளாளா் ஜெசி மற்றும் பங்கு பேரவை உறுப்பினா்கள் ஜாண்பீட்டா், இக்னிசியஸ், ஜாக்குலின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.