முகப்பு
வணிகம்

நவி மும்பை - அபுதாபி விமானங்களுக்கான முன்பதிவை தொடங்கிய ஏர் இந்தியா!

எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் அதித செலவுகள் உள்ளிட்டவையை தெரிவித்து, ஏர் இந்தியா தனது விமான சேவையை குறைத்தது.

Updated On : 21 ஜூன் 2026, 9:52 pm IST
ஏர் இந்தியா விமானம்
பகிர்:

மும்பை: எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் அதித செலவுகள் உள்ளிட்டவையை தெரிவித்து, ஏர் இந்தியா தனது விமான சேவையை சமீபத்தில் குறைத்தது.

இதனையடுத்து, ஜூலை 15 முதல் தொடங்கவுள்ள மும்பை மற்றும் அபுதாபி இடையிலான நேரடி விமானங்களுக்கான முன்பதிவை, விமான நிறுவனத்தின் இணையதளம், மொபைல் செயலி மற்றும் பிற முக்கிய தளங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று அறிவித்தது.

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கும் அபுதாபிக்கும் இடையிலான இந்த நேரடி விமான சேவையின் தொடக்கத்தால், மகாராஷ்டிர விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்கும் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மாறியது.

Advertisement

Advertisement

ஜூலை 15 முதல் வாரத்திற்கு இரண்டு சேவையும், பிறகு ஜூலை 29 முதல் வாரத்திற்கு மூன்று சேவைகளாகவும் அதிகரிக்கப்படும்.

இந்த வழித்தடம் மூலம், நவி மும்பையிலிருந்து அபுதாபி, பெங்களூரு மற்றும் தில்லி ஆகிய இடங்களை நேரடியாக இணைக்கும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு 30 விமானங்களை இயக்கும்.

மகாராஷ்டிரத்தில் தனது செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் தெரிவித்துள்ள விமான நிறுவனம், மும்பையிலிருந்து வாரத்திற்கு 95 க்கும் மேற்பட்ட விமானங்களையும், புனேவிலிருந்து 100 க்கும் மேற்பட்ட விமானங்களையும், நாக்பூரிலிருந்து வாரத்திற்கு 14 விமானங்களையும் இயக்குவதாகத் தெரிவித்துள்ளது.

summary

Air India Express said bookings for Navi Mumbai International Airport and Abu Dhabi, starting on July 15.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments