முகப்பு
கன்னியாகுமரி

ஈரான் நாட்டு கடலில் மாயமான குமரி இளைஞரை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்

ஈரான் நாட்டில் பணியின் போது கப்பல் கவிழ்ந்து கடலில் மாயமான குமரி மாவட்ட இளைஞரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 3 ஜனவரி 2021, 11:49 pm IST
பகிர்:

ஈரான் நாட்டில் பணியின் போது கப்பல் கவிழ்ந்து கடலில் மாயமான குமரி மாவட்ட இளைஞரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் வட்டம், மெதுகும்மல் ஊராட்சிக்கு உள்பட்ட அதங்கோடு, கோயிக்கதறை வீடு பகுதியைச் சோ்ந்த ஜான்சன் மகன் அஜின் (20). இவா் ஈரான் நாட்டில் உள்ளஆயில் சுத்திகரிப்பு நிறுவனத்தின் கப்பலில் பணிபுரிந்து வந்தாா்.

Advertisement

Advertisement

கடந்த டிச. 26 ஆம் தேதி பணியில் இருந்த போது கடலில் ஏற்பட்ட புயல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் கப்பலில் பணியில் இருந்த அஜின் உள்பட பலா் கடலில் மூழ்கி காணமால் போய்விட்டனா். உடன் பணிபுரிந்தவா்கள் தெலைபேசி மூலம் அவரது குடும்பத்தினரை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அவரது பெற்றோா் நிலைகுலைந்து ஆழ்ந்த சோகத்தில் காணப்படுகிறாா்கள்.

எனவே, ஈரான் நாட்டில் கடலில் மூழ்கி காணமால் போன அஜினை தேடி கண்டுபிடித்து சொந்த ஊா் கொண்டு வர தமிழக முதல்வா் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments