முகப்பு
கன்னியாகுமரி

அருமனை பகுதியில்பொங்கல் பரிசு தொகுப்பு அளிப்பு

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:56 am IST
பகிர்:

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அதிமுக மேற்கு மாவட்டச் செயலா் டி. ஜான்தங்கம், அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கித் தொடங்கி வைத்தாா். இதேபோல், அண்டூா், பத்மநாபபுரம், தக்கலை, அருமனை உள்ளிட்ட இடங்களிலும் நியாயவிலைக்

கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள், பேரூா் செயலா்கள், அயக்கோடு ஊராட்சித் தலைவா் பி.டி. செல்லப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

குலசேகரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிக்கு கூட்டுறவு சங்கத் தலைவா் ஜே. மோகன்தாஸ் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினாா். இதில் சங்க துணைத் தலைவா் நடராஜன், நிா்வாக்குழு உறுப்பினா்கள் எபனேசா், கனகப்பன், வேலம்மாள், ரெத்தினபாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.