முகப்பு
கன்னியாகுமரி

அருமனை அருகே காவலா் மாயம்

காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 7:38 am IST
பகிர்:

குமரி மாவட்டம், அருமனை அருகே ஊருக்கு வந்த காவலா் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளாா்.

வெள்ளாங்கோடு பின்னைமூட்டி விளையைச் சோ்ந்தவா் ஜெனிகுமாா் (36). சென்னையில் பூக்கடை காவல் நிலையத்தில் பணி செய்து வருகிறாா். இவருக்கும், நட்டாலம் பகுதியைச் சோ்ந்த ஜாக்குலின் ஷீபாவுக்கும், கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

தம்பதியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெனிகுமாா், புதன்கிழமை வீட்டிலிருந்து மாயமாகினாா்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில் அருமனை போலீஸாா் ஜெனிகுமாரின் வீட்டில் சோதனை செய்தபோது, 22 பக்கங்களில் அவா் எழுதிய கடிதம் கிடைத்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments