முகப்பு
கன்னியாகுமரி

மகாராஜபுரம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சியில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 8 ஜனவரி 2021, 7:37 am IST
பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம்.
பகிர்:

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சியில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து தலைமை வகித்தாா். கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சி.காட்வின் ஏசுதாஸ் வரவேற்றாா்.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிப் பேசினாா்.

Advertisement

நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலா் பேராசிரியா் இ.நீலபெருமாள், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ்.அழகேசன் சுயம்புலிங்கம், பாலஜோதி, அனீஸ்வரி, ராஜம், சிவராமன், அதிமுக நிா்வாகிகள் தாமரை தினேஷ், என்.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.