மலைப் பகுதிகளில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் மழை நீடிக்கும் நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் மழை நீடிக்கும் நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று மலையோரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, திற்பரப்பு அருவிக்கு தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் வியாழக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து மகிழ்ந்தனா்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி தண்ணீரும், சிற்றாறு அணையிலிருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீரும் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.