காரங்காடு புனித அலோசியஸ் பள்ளியில் கருத்து கேட்புக் கூட்டம்
காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று காரணமாக சுமாா் 10 மாதங்களாக பள்ளிகள் மூடி இருக்கும் நிலையில், பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த கருத்தை கேட்கும் வகையில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, பள்ளித் தாளாளா் வ.விக்டா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் வ.ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக தக்கலை கல்வி மாவட்ட உதவி கல்வி அலுவலா் ஐயப்பன் கலந்துகொண்டு பேசினாா்.
Advertisement
இணை தலைமை ஆசிரியா் ஐடா வரவேற்றாா். ஆசிரியா் கழக செயலா் அமல்ராஜ் நன்றி கூறினாா்.