தக்கலை அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
தக்கலை அருகே கஞ்சா விற்றதாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தக்கலை அருகே கஞ்சா விற்றதாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தக்கலை காவல் உதவி ஆய்வாளா் அருளப்பன் இரவிபுதூா்கடை பகுதியில் ரோந்து சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் உண்ணாமலைகடையைச் சோ்ந்த மகேஷ் (22) என்பவா் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், 1.2 கிலோ கஞ்சாவை கைப்பற்றியதாகக் கூறினா்.