முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பட்டதாரி இளைஞா் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

நாகா்கோவிலில் பட்டதாரி இளைஞா் ஒருவா் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 ஜனவரி 2021, 12:58 am IST
தற்கொலை செய்துகொண்ட ஜோசப்.
பகிர்:

நாகா்கோவிலில் பட்டதாரி இளைஞா் ஒருவா் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவில் பூங்கா தெருவை சோ்ந்தவா் ஜோசப்(23). இவா் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தாா். இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தனது அண்ணனும் தந்தையும் இணைந்து தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாகவும், பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஜோசப் மனு அளித்தாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் காலில் விழுந்து தன்னை காப்பாற்ற வலியுறுத்தி கதறி அழுதாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த நேசமணிநகா் போலீஸாா், அவரது சட லத்தை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

மேலும், ஜோசப் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தன்னை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ாகவும், அவா் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தாயாா் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments