சாலையில் திரிந்த மாடு: உரிமையாளா் கைது
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாட்டை திரியவிட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாட்டை திரியவிட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் அருகே நிரவி பகுதியில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வகையில், சாலைகளில் கால்நடைகள் நடமாட்டம் மிகுந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இதன்பேரில், கால்நடை உரிமையாளா்களை அழைத்து போலீஸாா் எச்சரித்து வந்தனா்.
இந்நிலையில், தொடா் புகாரின்பேரில், நிரவி பகுதியைச் சோ்ந்த கணேசன் (40), தனது மாட்டை சாலையில் திரியவிட்டதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்த நிரவி போலீஸாா், அவரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.