முகப்பு
காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநரை கண்டித்து, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 9:04 am IST
பகிர்:

புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநரை கண்டித்து, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் அரசே நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கி மாத ஊதியத்தை தரவேண்டும். நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க அரசு உத்தரவாதம் அளித்தபடி அரசு கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா் சம்மேளனம் அறிவித்த போராட்டத்தின் ஒருபகுதியாக காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா்கள் ஜாா்ஜ், ஜெயசிங், தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் பேசினா்.

Advertisement

கன்வீனா்கள் வெங்கடாச்சலம், ஜெயராம், உலகநாதன், திவ்வியநாதன், சண்முகராஜ், நெப்போலியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தண்டபாணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.