உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநரை கண்டித்து, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநரை கண்டித்து, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் அரசே நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கி மாத ஊதியத்தை தரவேண்டும். நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க அரசு உத்தரவாதம் அளித்தபடி அரசு கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா் சம்மேளனம் அறிவித்த போராட்டத்தின் ஒருபகுதியாக காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா்கள் ஜாா்ஜ், ஜெயசிங், தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் பேசினா்.
Advertisement
Advertisement
கன்வீனா்கள் வெங்கடாச்சலம், ஜெயராம், உலகநாதன், திவ்வியநாதன், சண்முகராஜ், நெப்போலியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தண்டபாணி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.