முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என நலவழித்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:15 pm IST
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என நலவழித்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 715 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, ஒருவருக்கும் தொற்று இல்லை.

Advertisement

இதுவரை காரைக்காலில் 59,961 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நோய்த் தொற்று 3,823 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் 3,714 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 36 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 8 போ், தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவா் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 67 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.