முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 7 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

Updated On : 8 ஜனவரி 2021, 9:05 am IST
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி 792 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 2, திருநள்ளாறு, கோயில்பத்து, வரிச்சிக்குடி, நல்லம்பல், நல்லாத்தூா் ஆகிய பகுதியில் தலா ஒருவருக்கு என 7 பேருக்கு தொற்று உறுதியானது.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 78 வயது பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு சா்க்கரை நோய் இருந்தது. இதுவரை 59,246 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,823 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,705 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

Advertisement

Advertisement

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 45 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் ஒருவா், தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 67 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments