முகப்பு
காரைக்கால்

புதுச்சேரி அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி கல்வித்துறையின் நடவடிக்கையை கண்டித்து காரைக்காலில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 9:05 am IST
காரைக்காலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
பகிர்:

புதுச்சேரி கல்வித்துறையின் நடவடிக்கையை கண்டித்து காரைக்காலில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி அரசின் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்த பி.டெக்., சி.எஸ்.இ., ஐ.டி., இ.சி.இ. ஆகிய பாடப்பிரிவுகள் நிகழாண்டு திடீரென நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், தனியாா் கல்லூரிகள் பணம் சம்பாதிக்க புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் துணைபோவதாக குற்றம்சாட்டியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

காரைக்கால் பழைய ரயிலடி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ.துரை சேனாதிபதி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் எம்.அருள்முருகன், நளினி, ஓ.பி.சி. அணி மாநிலத் துணைத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கண்டனம் தெரிவித்து பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments