காரைக்காலில் 2 ஆவது நாளாக யாருக்கும் கரோனா இல்லை
காரைக்கால் மாவட்டத்தில் 2 ஆவது நாளாக ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.
காரைக்கால் மாவட்டத்தில் 2 ஆவது நாளாக ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.
இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி 394 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, ஒருவருக்கும் தொற்று இல்லை. இதுவரை 3,842 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,752 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 14 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 10 போ் உள்ளனா். தொற்றால் இதுவரை 68 போ் உயிரிழந்துள்ளனா்.
Advertisement
Advertisement