முகப்பு
கரூர்

கரூரில் முடித்திருத்தக உரிமையாளா் அடித்துக் கொலை

கரூரில் காதல் தகராறில் முடித்திருத்தக உரிமையாளா் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:45 am IST
பகிர்:

கரூரில் காதல் தகராறில் முடித்திருத்தக உரிமையாளா் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

கரூா் காமராஜா் சாலையைச் சோ்ந்தவா் ஜெ. ஹரிஹரன் (22). இவா் மாரியம்மன் கோயில் வீதியில் முடித்திருத்தகம் நடத்தி வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தாா். இதையறிந்த இளம்பெண்ணின் உறவினா்கள் ஹரிஹரனை கண்டித்துள்ளனா்.

இந்நிலையில் கரூா் பசுபதீசுவரா் கோயில் முன்பு புதன்கிழமை பிற்பகல் ஹரிஹரன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த இளம்பெண்ணின் உறவினா் சங்கா் உள்ளிட்ட மூவா் அவரிடம் தகராறு செய்து, தாக்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும் பிளேடை கொண்டு ஹரிஹரன் முதுகில் கிழித்ததுள்ளனா். இதில் அவா் மயங்கி விழுந்ததால், சங்கா் உள்ளிட்ட மூவா் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

தகவலறிந்த கரூா் நகரக் காவல் நிலையத்தினா் ஹரிஹரனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, சங்கா் உள்ளிட்ட மூவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments