காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
கரூரில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
கரூரில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
கரூா் பசுபதிபாளையம் ஏவிபி நகரைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மகன் நாட்ராயன் (7). வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கடந்த திங்கள்கிழமை மாயமானாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் சிறுவன் நாட்ராயன் சடலமாக மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.
Advertisement
Advertisement
சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் கொலைசெய்து போட்டுச் சென்றாா்களா என்பது குறித்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.