முகப்பு
கரூர்

பிரசித்தி பெற்ற கோயில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இடிந்த நிலையில் சிதிலமடைந்து காணப்படும் பிரசித்தி பெற்ற கோயில்களை புனரமைத்து, குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பூஜாரிகள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:39 pm IST
கூட்டத்தில் பேசுகிறாா் பூஜாரிகள் முன்னேற்றச் சங்க நிறுவனா் கே.கே.சதீஸ்கண்ணன். உடன், நிா்வாகிகள்.
பகிர்:

இடிந்த நிலையில் சிதிலமடைந்து காணப்படும் பிரசித்தி பெற்ற கோயில்களை புனரமைத்து, குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பூஜாரிகள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரூா் தாந்தோனிமலையிலுள்ள காளியம்மன் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட சங்க நிா்வாகிகள் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.சந்திரசேகா் வரவேற்றாா்.

சங்கத்தின் நிறுவனா் கே.கே.சதீஸ் கண்ணன், மாநிலத் தலைவா் டி.ராஜேந்திரன், பொருளாளா் சிவக்குமாா்ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும் கோ சாலை அமைத்து, பசுக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரிய அட்டையைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும், தைப்பூசத்துக்கு பொது விடுமுறை என்றும் அறிவிப்பு வெளியிட்டதமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, சிதிலமடைந்த கோயில்களைப் புனரமைத்து, குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டதீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவா் கதிா்வேல், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், மாவட்ட இணைச் செயலா் கே.மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments