மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களின் படங்கள் திறப்பு
கரூரில் மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூரில் மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் கே.வரதராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.தங்கவேல், முன்னாள் மாவட்டச் செயலா் து.ரா.பெரியதம்பி ஆகியோா் அண்மையில் உயிரிழந்தனா்.
இவா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் நகரக்குழு நடத்தப்பட்ட விழாவுக்கு நகரச் செயலா் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தாா்.
Advertisement
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் கே.வரதராஜன் படத்தை மாவட்டச் செயலா் கே.கந்தசாமியும், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.தங்கவேல் படத்தை மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஸ்ரீதரும்,
முன்னாள் மாவட்டச் செயலா் து.ரா.பெரியதம்பி படத்தை மூத்த தலைவா் ஜி.ரத்தினவேலும் திறந்து வைத்து பேசினா்.
கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஜீவானந்தம், பி.இலக்குவன், கே.சக்திவேல், சி.முருகேசன் உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்றனா். மேலும் கே.வரதராஜன், து.ரா.பெரியதம்பி ஆகியோரது குடுத்தினரும் கலந்துகொண்டு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.