விஷம் குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை
குளித்தலை அருகே மனைவி, மற்றும் குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில், கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
குளித்தலை அருகே மனைவி, மற்றும் குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில், கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், இனாம்புலியூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பூசான் (47). கணவா்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 20 ஆண்டுகளாக பூசானும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் தனியே வசித்து வந்துள்ளனா்.
இதனால் விரக்தியடைந்த பூசான் வியாழக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.