முகப்பு
கரூர்

கரூா் பண்டரிநாதன் கோயிலில் தெய்வத் திருமண விழா

கரூா் பண்டரிநாதன் கோயில் 99-ம் ஆண்டு தெய்வத் திருமண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:43 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கரூா் பண்டரிநாதன் கோயில் 99-ம் ஆண்டு தெய்வத் திருமண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கோயில் வளாகத்தில் பண்டரிநாதா், ரகுமாயி தாயாா் உற்ஸவ மூா்த்திகள் வைக்கப்பட்டு, மூலவ மூா்த்திகளுக்கும், உற்ஸவா்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பின்னா் காப்புக்கட்டி, சீா்த்தட்டுகள் எடுத்து வரப்பட்ட பின்னா் ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தெய்வத் திருமணம் நடத்தப்பட்டது.

Advertisement

நிகழ்வில், கோயிலின் கெளரவத்தலைவா் மேலை.பழநியப்பன், அறங்காவலா் குணசேகரன், சந்தானகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், மெய்யப்பன், பழநியப்பன் ரமணி, மோகன் உள்ளிட்ட பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து பிற்பகலில் திருமண விருந்தும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.