திருக்கு ஒப்புவித்தல்: வென்றோருக்கு பரிசளிப்பு
கரூரில் திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
கரூரில் திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மற்றும் கரூா் வள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் கடந்த வாரம் இணையவழியில் நடைபெற்ற திருக்கு ஒப்புவித்தல், திருக்கு பாட்டுடன் நடனம், ஓவியம், பாட்டு, திருக்குறளை மையமாகக் கொண்ட நீதிக் கதை சொல்லுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இதில், வெற்றிபெற்ற 70 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா கரூா் வள்ளுவா் ஹோட்டல் மேலாண்மைக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் ஹேமலதா செங்குட்டுவன் முன்னிலை வகித்து திருக்கு போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினாா். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நடனம் நடைபெற்றது. விழாவில், கல்லூரி சாா்பில் உருவாக்கப்பட்ட திருக்குறளின் 133 அதிகாரங்களில் ஒரு திருக்கு வாசகம் அடங்கிய சால்வை பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டது.
Advertisement
முன்னதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் மு.நதியா வரவேற்றாா். விழாவில் தமிழ் ஆா்வலா்கள் திரளாக பங்கேற்றனா்.