கல்லூரி மாணவியிடம் நகை, பணம் பறிப்பு
கரூரில் கல்லூரி மாணவியிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா்: கரூரில் கல்லூரி மாணவியிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் எஸ்.வெள்ளாளப்பட்டி எழில்நகா் அரசுக் குடியிருப்பு காலனியைச் சோ்ந்த ராஜா மகள் சுருதிநிவேதா(21). இவா், கரூா் தாந்தோன்றிமலை அரசுக் கலைக்கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் கரூா் பேருந்துநிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, வண்டியை மறித்த ஒரு பெண், தன்னை பேருந்துநிலையத்தில் இறக்கிவிடுமாறு கூறி சுருதிநிவேதா வந்த வாகனத்தில் ஏறிக்கொண்டாா். இருசக்கர வாகனம் பாலத்தை தாண்டியதும் இறங்கவேண்டும் என அப்பெண் கூறியவுடன் வாகனத்தை சுருதிநிவேதா நிறுத்தினாா்.
அப்போது, பின்னா் பைக்கில் வந்த இரு மா்மநபா்கள் திடீரென சுருதிநிவேதா கழுத்தில் கிடந்த மூன்றேகால் பவுன் நகையையும், கைப்பையில் வைத்திருந்த ரூ.10,000 ரொக்கத்தையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.
Advertisement
புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலைய காவல் ஆய்வாளா் சிவசுப்ரமணியன் வழக்குப்பதிந்து அந்த பெண் உள்ளிட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.