கஞ்சா விற்றதாக இருவா் கைது
கரூரில் கஞ்சா விற்றதாக சிற்றுந்து நடத்துநா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
கரூரில் கஞ்சா விற்றதாக சிற்றுந்து நடத்துநா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
கரூா் மாவட்ட விளையாட்டரங்கம் அருகே சிலா் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் சனிக்கிழமை இரவு அங்கு சென்று சோதனையிட்டனா்.
அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சிற்றுந்து நடத்துநா் காளியப்பனூா் தமிழரசன் (27), அவரது சகோதரா் சதீஷ்குமாா் (31) ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1340 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement