முகப்பு
குழந்தைகள் உலகம்

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:20 PM
பிளாஸ்டிக் நாற்காலி - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

பிளாஸ்டிக் நாற்காலிகள், முக்காலிகளின் உட்காரும் பகுதியின் நடுவில் வட்ட வடிவ ஓட்டை ஒன்று இருப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

நாம் நாற்காலியில் உட்காரும்போது, அதிலிருக்கும் காற்று வெளியேறுவதால் ஒரு வெற்றிடம் உருவாகும். அந்த வெற்றிடத்தை நமது உடல் நிரப்புகிறது.

இந்த ஓட்டை இல்லாவிட்டால் உடலின் அழுத்தத்தினால் நாற்காலியின் கால்கள் விரிவடைந்து அதனுடைய 'பேலன்ஸ்' தவறக்கூடும்.

Advertisement

அதனால் கால்கள் உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்ப்பதற்குக்தான் இந்த ஓட்டை.

இந்த ஓட்டையினால் கீழிருந்து காற்று உள்ளே வருவதால், நமது எடையினால் நாம் சரியாக உட்கார முடிகிறது.

இவை தயாரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்படும்போது ஓட்டை இல்லாவிட்டால் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய பிறகு மீண்டும் அவற்றை ஒவ்வொன்றாகப் பிரிப்பது மிகவும் கடினமாகிவிடும் என்று கூறப்படுகிறது.

summary

About rare information that children should know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.