இது தெரியுமா? விமான ஜன்னல்களின் 4 மூலைகளும் வட்ட வடிவமாக அமைக்கப்படுவது ஏன்?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
விமானங்களின் ஜன்னல்களின் நான்கு மூலைகளும் ஏன் வட்ட வடிவமாக அமைக்கப்படுகிறது?
சதுர வடிவ ஜன்னல்களின் நான்கு முனைகளும் கூர்மையாக அமைந்து விடுகிறது. ஆனால், முனைகள் கூர்மையாக இல்லாமல் வட்டமாக அமைக்கும்போது அதைத் துடைப்பதற்குக்கூட எளிதாக அமைந்துவிடும்.
இதுதான் முதன்மையான காரணம். மேலும், பொதுவாக கூர்மையான முனைகள் அதிகப்படியான அழுத்தத்துக்கு உள்ளாகும். அதனால் அவை நாளடைவில் வலுவிழந்து விடக்கூடும்.
Advertisement
Advertisement
விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே ஜன்னல் உடையக் கூடிய அல்லது அவற்றில் விரிசல் விழக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் விமானத்தைச் சுற்றி வெளிக்காற்றின் அழுத்தம் மிகமிக அதிகமாக இருக்கும்.
இதுபோன்ற வளைந்த அல்லது வட்ட வடிவ ஜன்னல்களில் காற்று மோதும்போது அது ஓரிடத்தில் குவிக்கப்படாமல் பல்வேறு இடங்களுக்கு அது கடத்தப்படும். அதனால்தான் விமான ஜன்னல்கள் வட்டவடிவில் அமைக்கப்படுகின்றன.
About rare information that children should know
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.