இது தெரியுமா? இரவில் வரும் நிலா சில நேரம் பகலிலும் தெரிகிறதே, ஏன்?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
இரவில் வரும் நிலா (சந்திரன்) சமயங்களில் பகலிலும் தெரிகிறதே, இது ஏன்?
நிலா தானாக ஒளியை வீசுவதில்லை. சூரியனிடம் ஒளியைக் கடன் வாங்கித்தான் நிலா பிரகாசிக்கிறது. அதாவது எதற்கு நேர் எதிரே உள்ள சூரியனின் ஒளியை ஒரு கண்ணாடி போலப் பிரதிபலிக்கிறது.
இப்படியிருக்கும்போது பகலிலும் சூரியன் எதிரே இருந்தால் அந்த ஒளியை வாங்கி நிலா பிரகாசிக்கத்தானே செய்யும்.
Advertisement
Advertisement
பகலில் நிலா பளிச்சிடுவதற்குக் காரணம் அது இருக்கும் கோணமும் பூமியிலிருந்து அது எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதையும் பொறுத்தது.
நிலவும் சூரியனும் பூமிக்குப் பக்கமாக இருக்கும்போது நிலா பிரகாசிக்கும். நிலவுக்கும் சூரியனுக்கும் நடுவே பூமி வரும்போது சூரியனின் ஒளியை பூமி மறைத்து விடுவதால் பகலில் பல சமயங்களில் நிலா தெரிவதில்லை.
About rare information that children should know
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.