ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் : கம்பீர்
வரவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவேன் என்று கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
வரவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவேன் என்று கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினால், கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. மஞ்சள்காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கௌதம் கம்பீர், தான் இன்னும் ஒரு வார காலத்துக்குள் பூரண குணமடைந்து விடுவேன். வரவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று தனது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 3ம் தேதி கொல்கட்டா அணிக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும் போட்டியில் கம்பீர் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று அவரது மேலாளர் உறுதி செய்துள்ளார்.
Advertisement