கூட்டுறவு சங்க தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி
துரை குணசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வில்லை. எனவே தேர்தலை ரத்து செய்ய
கூட்டுறவு சங்க தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
துரை குணசேகரன் என்பவர், நடக்க உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வில்லை. எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அகர்வால், பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கிவிட்டதால், ரத்து செய்யமுடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.