போதைப் பொருள் எடுத்திருந்தால் ஒலிம்பிக் பதக்கம் வென்றிருக்க முடியாது : விஜேந்தரின் தந்தை
இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஒரு வேளை போதைப் பொருள் எடுத்திருந்தால், ஒலிம்பிக் பதக்கம் வென்றிருக்க முடியாது என்று அவரது சந்தை தெரிவித்துள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஒரு வேளை போதைப் பொருள் எடுத்திருந்தால், ஒலிம்பிக் பதக்கம் வென்றிருக்க முடியாது என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் காவல்துறையினரின் குற்றச்சாட்டை மறுத்துள்ள விஜேந்தரின் தந்தை மஹிபால் சிங் பெனிவால், எனது மகன் போதைப் பொருளை எடுத்துக் கொண்டதே இல்லை. அவன் நிரபராதி. 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சமீபத்தில்தான் நடந்தது. ஒரு வேளை அவர் போதைப் பொருள் எடுத்துக் கொண்டிருந்தால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.