முகப்பு
தற்போதைய செய்திகள்

மியான்மரில் முதன்முறையாக தனியார் பத்திரிகைகள் வெளியீடு

ராணுவ ஆட்சியின் கீழ் அரசுக்கு சொந்தமான பத்திரிகைகளே வெளியிடப்பட்டன. தனியாருக்கு சொந்தமான பத்திரிகைகள் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. தற்போது அரசின் புதிய

Updated On : 1 ஏப்ரல் 2013, 3:55 pm IST
பகிர்:

கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக மியான்மர் நாட்டில் தனியாருக்கு சொந்தமான பத்திரிகைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ராணுவ ஆட்சியின் கீழ் அரசுக்கு சொந்தமான பத்திரிகைகளே வெளியிடப்பட்டன. தனியாருக்கு சொந்தமான பத்திரிகைகள் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. தற்போது அரசின் புதிய கொள்கையின்படி தனியார் பத்திரிகைகள் வெளியிட அனுமதி தரப்பட்டுள்ளது.

பர்மிய மொழியில் உள்ள வாரப்பத்திரிகைகளான தி வாய்ஸ், தி கோல்டன் பிரஷ் லேண்ட், தி யூனியன், தி ஸ்டாண்டர்ட் டைம் உள்ளிட்டவை நாளிதழ்களாக மாற்றப்பட்டுள்ளன. தி வாய்ஸ் நாளிதழின் ஆசிரியர் ஆங் சோ கூறுகையில்: அதிகாலையிலேயே வாய்ஸ் பத்திரிகை விற்பனை மும்முரமாக இருந்தது. தனியார் நாளிதழ்களை படிக்க பொதுமக்கள் எவ்வளவு ஆர்வமுடன் உள்ளனர் என்பதையே இது காண்பிக்கிறது.ராணுவ ஆட்சியாளர்கள் கடந்த 1964-ல் பத்திரிகைகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்நிலையில் புதிய அரசு கடந்த 2011-ல் பதவியேற்றவுடன் பத்திரிகைகள் மீதான தனது கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

Advertisement

Advertisement

ராணுவ ஆட்சியின்போது ஜனநாயக இயக்கம் மற்றும் அதன் தலைவர் ஆங் சான் சூ கியின் பெயரை பயன்படுத்தினாலே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என மூத்த பத்திரிகையாளர் தின்ஹா சா தெரிவித்தார். புதிய விதிமுறைகளின்படி 16 வார இதழ்கள் நாளிதழ்களாக மாற அனுமதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.