தனியார் நிறுவனத்தில் தீ விபத்து: ரூ. 2 1/2 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
திருப்பூர் ராம் நகரில் தனியாருக்கு சொந்தமான 3 தளங்களை கொண்ட பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் முதல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தளத்தில் பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவி 2 மற்றும் 3வது தளத்துக்கு பரவத் தொடங்கியது.தகவலறிந்த
திருப்பூர் ராம் நகரில் தனியாருக்கு சொந்தமான 3 தளங்களை கொண்ட பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் முதல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தளத்தில் பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவி 2 மற்றும் 3வது தளத்துக்கு பரவத் தொடங்கியது.தகவலறிந்த திருப்பூர் வடக்கு தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் இருந்த துணிகள், தையல் எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ. 2 1/2 கோடி இருக்கும் எனத் தெரிகிறது.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.