முகப்பு
கிரிக்கெட்

விராட் கோலி திமிர் பிடித்தவர்! அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

விராட் கோலி திமிர் பிடித்தவர், அடங்காதவர் என்று ரவி சாஸ்திரி பேசியுள்ளது பற்றி...

Updated On : 15 ஜூன் 2026, 7:36 pm IST
விராட் கோலி, ரவி சாஸ்திரி - கோப்புப் படம்
பகிர்:

விராட் கோலி திமிர் பிடித்தவர், அடங்காதவர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திங்கள்கிழமை (ஜூன் 15) தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு தனது 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காகவும், பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல்-ல் ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாடி வருகிறார். பல சாதனைகளை முறியடித்த உலகின் முன்னணி பேட்டர்கள் வரிசையில் வலம் வரும் விராட் கோலி மீது, அவர் ஆடுகளத்தின் உள்ளே சென்றதும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவார், யாருக்கும் அடங்கமாட்டார் போன்ற பல விமர்சனங்கள் உண்டு.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலியுடனான தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசியதாவது:

விராட் கோலி திமிர் பிடித்தவர். அடங்காதவர். எல்லாவற்றையும் அதன் எல்லை வரை கொண்டு செல்பவர். இவை அனைத்தும் உண்மைதான். ஆனால், இவையெல்லாம் களத்தில் மட்டும்தான். களத்துக்கு வெளியே முற்றிலும் நேர்மாறானவர். இவ்வாறு, களத்தில் ஆக்ரோஷமாகவும் களத்துக்கு வெளியே மிகவும் அமைதியாகவும் செயல்படும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

summary

Former Indian cricket team head coach Ravi Shastri stated on Monday (June 15) that Virat Kohli is arrogant and unyielding.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.