முகப்பு
தற்போதைய செய்திகள்

நடிகர் சஞ்சய் தத் மறுசீராய்வு மனு தாக்கல்

1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.  இந்நிலையில் சரணடைய கால அவகாம் ‌கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இம்மாதம் 17-ம் தேதி 4 வார காலம் அவகாசம் அளித்தது.

Updated On : 21 ஏப்ரல், 2013 at 2:59 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்(53) , உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.  இந்நிலையில் சரணடைய கால அவகாம் ‌கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இம்மாதம் 17-ம் தேதி 4 வார காலம் அவகாசம் அளித்தது. இந்நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சஞ்சய் தத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த மனு நிரகாரிக்கப்பட்டால், மே 18-ம் தேதி அவர்  நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.