சரப்ஜித் சிங் குடும்பத்துக்கு ராகுல் நேரில் ஆறுதல்
லாகூர் மருத்துவமனையில் உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
லாகூர் மருத்துவமனையில் உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, லாகூர் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித் சிங், நினைவு திரும்பாமலேயே இன்று காலை உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகள்கள், சகோதரி ஆகியோரை, ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Advertisement