முகப்பு
தற்போதைய செய்திகள்

புயல் சின்னம் : அந்தமானில் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 11 மே, 2013 at 12:25 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் அந்தமானில் 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும், பாதுகாப்புக் காரணமாக அந்தமான் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.